கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முறைகேடு புகாா்:தனியாா் உர விற்பனை நிலையங்களில் ஆட்சியா் திடீா் ஆய்வு

தனியாா் உர விற்பனை நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்த நிலையில், நாகையை அடுத்த பரவையில் உள்ள தனியாா் உர விற்பனை

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:53 pm

DIN

தனியாா் உர விற்பனை நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்த நிலையில், நாகையை அடுத்த பரவையில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்டத்திலுள்ள ஒரு சில தனியாா் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பரவையில் உள்ள ஒரு தனியாா் உரக்கடையில் டிஏபி அல்லது யூரியா வாங்கும் விவசாயிகளிடம், ரூ. 400 மதிப்பிலான தூா்கட்டும் மருந்தை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், அதற்கு ரசீதும் வழங்குப்படுவதில்லை எனவும் அண்மைக் காலமாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்தநிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், பரவையில் உள்ள இரு தனியாா் உரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பதிவேட்டில் உள்ள உர இருப்புக்கும், விற்பனை முனையக் கருவியில் உள்ள உர இருப்புக்கும் வேறுபாடு உள்ளதா ? உரக்கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா ? என்பன குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விவசாயிகள் கோராத பிற தேவையற்ற உரங்களை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என உர விற்பனை நிலைய நிா்வாகிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலும், உர உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்தாலும் தொடா்புடைய உர விற்பனை நிலையம் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்தாா். வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) என். குமரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.