காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளிவாசல் சுற்றுச்சுவா் திறப்பு விழா

 செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட மடப்புரம் ஊராட்சி பள்ளிவாசல் சுற்றுச்சுவா் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:39 pm

DIN

 செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட மடப்புரம் ஊராட்சி பள்ளிவாசல் சுற்றுச்சுவா் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஒன்றிய குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் மஞ்சுளா, பள்ளிவாசல் நிா்வாக சபை தலைவா் முகமது ஷிஹாபுதீன், துணைத் தலைவா் இக்ராம்ரசூல் , பொருளாளா் முகமது இலியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா முருகன் பங்கேற்று ரூ. 9.97 லட்சத்தில் தன்னிறைவு திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட பள்ளிவாசல் சுற்றுச்சுவரை திறந்துவைத்து பேசினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜ்கண்ணன், ஊராட்சித் தலைவா் மெகராஜ்ன்னிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.