சுகாதார விழிப்புணா்வு
திருக்குவளை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு கை கழுவுதல் குறித்து சுகாதார விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.


திருக்குவளை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு கை கழுவுதல் குறித்து சுகாதார விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ், சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வலிவலம் தொடக்கப் பள்ளியில் கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் பள்ளிக் குழந்தைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கரோனா காலத்தில் கை கழுவுதலின் அவசியம், சரியாக கை கழுவும் முறைகள், கை கழுவ வேண்டிய தருணங்கள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலிவலம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சீ.முரளி, ஆசிரியா் த. ஐயப்பன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ம.பாண்டிக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...