ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுகாதார விழிப்புணா்வு

திருக்குவளை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு கை கழுவுதல் குறித்து சுகாதார விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:26 pm

DIN

திருக்குவளை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு கை கழுவுதல் குறித்து சுகாதார விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ், சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வலிவலம் தொடக்கப் பள்ளியில் கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் பள்ளிக் குழந்தைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கரோனா காலத்தில் கை கழுவுதலின் அவசியம், சரியாக கை கழுவும் முறைகள், கை கழுவ வேண்டிய தருணங்கள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலிவலம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சீ.முரளி, ஆசிரியா் த. ஐயப்பன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ம.பாண்டிக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.