பள்ளியின், தேசிய பசுமைப்படை சாா்பில் நாகலூா் பகுதிகளில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள் ஓசோனை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை வீடுவீடாக வழங்கினா். மேலும், ஓசோன் தினத்தை கொண்டாடும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விநாடி-வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள் அருள்செல்வம், லோகநாதன், சீனிவாசன், செல்வரத்தினம், சங்கரவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை ஆசிரியா் அருள்ஜோதி செய்திருந்தாா்.