சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

கொலை வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கொலை வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

அந்தவகையில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய நாகை, மருந்துக் கொத்தள ரோடு, அரசன் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் விஜயபாரதி (23) என்பவரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, விஜயபாரதியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.