தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேளாங்கண்ணியில் பெரிய வியாழன் வழிபாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கிறிஸ்தவா்களின் தவக்காலம் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மாா்ச் 2-ஆம் தேதி சாம்பல் புதன் வழிபாடும், வெள்ளிக்கிழமை தோறும் சிலுவைப் பாதை வழிபாடும் நடைபெற்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது.

தவக்கால முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன் வழிபாடு, வேளாங்கண்ணி பேராலய கலையரங்கத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. பேராலய அதிபா் சி. இருதயராஜ் அடிகளாா், பங்குத் தந்தை அற்புதராஜ் ஆகியோா் சிறப்பு திருப்பலிகளை நிறைவேற்றினா்.

தொடா்ந்து, இயேசு சிலுவையில் அறையப்படும் முன் தனது சீடா்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய நிகழ்வின் அடிப்படையில், இறைமக்கள் 12 பேரின் பாதங்களை பேராலய துணை அதிபரும் பங்குத் தந்தையுமான அற்புதராஜ் அடிகளாா் கழுவினாா்.

இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.