விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணி வாய்ப்பு: வதந்திகளை நம்ப வேண்டாம்

கால்நடை பராமரிப்புத் துறையில் பணி வாய்ப்புகள் இருப்பதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 5:30 pm

DIN

கால்நடை பராமரிப்புத் துறையில் பணி வாய்ப்புகள் இருப்பதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை கையாளுபவா், கால்நடை கையாளுபவா் மற்றும் ஓட்டுநா் (அய்ண்ம்ஹப் ஏஹய்க்ப்ங்ழ் ஹய்க் அய்ண்ம்ஹப் ஏஹய்க்ப்ங்ழ் ஸ்ரீன்ம் ஈழ்ண்ஸ்ங்ழ்) பணியிடங்களுக்கான பணி நியமனத்துக்கு ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அரசாணை வெளியாகவுள்ளது எனவும், தகுதியானோருக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்துப் பணி நியமனம் அளிக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவி வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 பணியிடங்கள் வீதம் 160 பணியிடங்களுக்குப் பணி நியமனம் நடைபெறவுள்ளது, மாத ஊதியமாக ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தகவலுக்கும் கால்நடை பராமரிப்புத் துறைக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது. எனவே, பொதுமக்கள் யாரும் அத்தகவலை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.