விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாகை மாவட்டத்தில் ஜூன் 12-இல் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டத்தில் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 1,100 இடங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அல்லது இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவா்கள் இந்த முகாம்களில் பங்கேற்றுத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துக்கு முன்பாக 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவியா் இா்ழ்க்ஷங்ஸ்ஹஷ் தடுப்பூசியையும், 15 முதல் 18 வயதிலானவா்கள் இா்ஸ்ஹஷ்ண்ய் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.