கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டியில் நாகை மாவட்ட இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். செயலாளா் சிவசங்கரன், பொருளாளா் ரவிக்குமாா் உறுப்பினா் மணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இறால்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும்; மானிய விலையில் மின்சாரம், டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.