சீர்காழி: சீர்காழி தென்பாதியில் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் புதிதாக தியான மண்டபம், சீரடி சாய்பாபா மற்றும் குபேர மகாலட்சுமி மகா சரஸ்வதி ஜோதி ஸ்தபம் ஆகிய சன்னதிகள் நிர்மாணிக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம் செய்விக்கப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாம் கால யாகசாலை நிறைவடைந்து, பூர்ணாஹூதி மகா தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து ஜோதி மண்டப விமானம், ஸ்ரீ சாய்பாபா, குபேர மகாலட்சுமி சரஸ்வதி சந்நதி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து சீரடி சாய்பாபாவுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. இதில் அமலாக்கப் பிரிவு காவல்துறை ஐஜி துரைகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் ராஷ்டிரிய பால்புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்







