நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், கிராம வளா்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணிகள், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), எழில்மிகு கிராமம் உறுதி மொழி, ஜல்ஜீவன் இயக்கம், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்புகீ குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு குழந்தைகள் மற்றும் முதியோா்கள் உதவி எண்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு குறித்த விவாதங்கள் நடைபெறும்.

கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சோ்ந்த அரசு அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மை குழு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடா்பான விவரங்களை விவாதித்திட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com