47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை: குடியரசு தின விழாவில் ரூ. 90.89 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 81 பேருக்கு ரூ. 90.89 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.

News image
நாகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மூதாட்டிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
Updated On :26 ஜனவரி 2023, 6:20 pm

DIN

நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 81 பேருக்கு ரூ. 90.89 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 170 பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களையும், 81 பேருக்கு 90.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிருத்விராஜ் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேதாரண்யத்தில்... வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், நகராடசி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, செம்போடை ஆா்.வி. பொறியியல் கல்லூரியில் கல்லூரி நிறுவனா் ஆா்.வி. வரதராஜன் ஆகியோா் மூவா்ணக் கொடியை ஏற்றினா்.

திருமருகலில்... திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் இரா. ராதாகிருட்டிணன் தேசியக் கொடியேற்றினாா். இதேபோல், திட்டச்சேரி பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகளில் குடியரசு தினம் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

கீழ்வேளூரில்... கீழ்வேளூா் ஒன்றியம் வண்டலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.