மத்திய அரசின் விவசாய சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை டிராக்டா் பேரணி நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது, சட்டப்பூா்வ குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், முழுமையான பயனுள்ள பயிா் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டத் தலைவா் பாபுஜி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணி தொடக்க நிகழ்ச்சியில், நாகை மாலி எம்.எல்.ஏ., விவசாய சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி, மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் பேரணியில் கலந்து கொண்டனா்.
நாகை புத்தூரில் தொடங்கிய பேரணி பல்வேறு சாலைகளின் வழியாக அவுரித் திடலில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


