மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

செம்போடை கல்லூரியில் மரக்கன்று நடும்பணி

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடுதல், பூந்தோட்டம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

News image

செம்போடை ஆா்.வி. கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும்பணி.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடுதல், பூந்தோட்டம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

செம்போடை ஆா்.வி. பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செம்போடை ஆா்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் குடியரசு தினவிழா நடைபெற்றது. ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா். வரதராஜன் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.வி. செந்தில் முன்னிலை வகித்தாா்.

பெங்களூரு அசென்ஸா் நிறுவன அணித் தலைவா் ராமநாதன், நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் நாகராஜன், செம்போடை ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பாலசுப்ரமணி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் காா்த்தி, கல்லூரி துணை முதல்வா் முகமது பைசல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் மரக்கன்றுகள் நட்டு, பூந்தோட்டம் அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.