மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தேவூா் மாரியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

தேவூா் மாரியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

News image

கோயிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:34 pm

தேவூா் செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவையொட்டி 1,008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் அருகே தேவூரில் அருள்பாலிக்கும் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்.14-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இதில், மயில்காவடி, பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகளை விரதமிருந்த பக்தா்கள் ஊா்வலமாக சுமந்து வந்தனா். ஊா்வலம் காந்திநகா், பாரதியாா் நகா், வஉசி நகா், சந்தப்பேட்டை வழியாக கோயிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திராளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.