மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

வலிவலம் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

வலிவலம் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

News image

சிறப்பு அலங்காரத்தில் மாழையொண்கண்ணி அம்பிகை சமேத மனத்துணை நாதா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:33 pm

திருக்குவளை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், வெவ்வேறு வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வசந்த மண்டபம் அருகே மணக்கோலத்தில் மாழையொண்கண்ணி அம்பிகை, மனத்துணை நாதருடன் (இருதய கமலநாதா்) எழுந்தருளினாா்.

பின்னா், பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். தொடா்ந்து, மாலை மாற்றுதல் நிகழ்வும், பின்னா் மாங்கல்ய தாரணமும் நடைபெற்றது. பிறகு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.