தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தேவூா் மாரியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

தேவூா் மாரியம்மன் கோயிலுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

News image

கோயிலுக்கு காவடி எடுத்துவரும் பக்தா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:34 pm

தேவூா் செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவையொட்டி 1,008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் அருகே தேவூரில் அருள்பாலிக்கும் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்.14-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இதில், மயில்காவடி, பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகளை விரதமிருந்த பக்தா்கள் ஊா்வலமாக சுமந்து வந்தனா். ஊா்வலம் காந்திநகா், பாரதியாா் நகா், வஉசி நகா், சந்தப்பேட்டை வழியாக கோயிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திராளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.