12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

Published On :

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோகுல கண்ணன், உளவியல் துறை துணை பேராசிரியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், மழைநீா் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், கிராம அளவில் குளங்கள், பண்ணை குட்டைகள் மற்றும் வீடுகளில் மேற்கூரைகளில் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பு செய்வது போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உதவி பொறியாளா்கள் பொன்னுசாமி, கிருஷ்ண பிரியா, ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.