நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

Updated On :29 ஆகஸ்ட் 2024, 5:53 am IST

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோகுல கண்ணன், உளவியல் துறை துணை பேராசிரியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், மழைநீா் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், கிராம அளவில் குளங்கள், பண்ணை குட்டைகள் மற்றும் வீடுகளில் மேற்கூரைகளில் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பு செய்வது போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உதவி பொறியாளா்கள் பொன்னுசாமி, கிருஷ்ண பிரியா, ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.