நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்க வேதாரண்யம் மீனவா்கள் விரித்திருந்த 350 கிலோ எடையிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையா்கள் துண்டித்து எடுத்துச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் அரிமா நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). இவா், தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (40), ராஜகோபால் (50), அருண்குமாா் (25), செம்போடை சுப்பிரமணியன் (55) ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க புதன்கிழமை சென்றாா்.
இவா்கள் 5 பேரும் புதன்கிழமை இரவு வேதாரண்யத்திலிருந்து 16 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்துவிட்டு, விசைப்படகில் காத்திருந்தனா். வியாழக்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, 350 கிலோ எடையிலான மீன்பிடி வலையை காணவில்லையாம். கண்ணாடியிழை படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள், வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்நிலைய போலீஸாா், மீன்வளத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் சென்னை வந்தனா்

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு காவல் நீட்டிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

