தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இலங்கை கடற்கொள்ளையா்கள் அட்டூழியம்: வேதாரண்யம் மீனவா்கள் வலை துண்டிப்பு

Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:05 am

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்க வேதாரண்யம் மீனவா்கள் விரித்திருந்த 350 கிலோ எடையிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையா்கள் துண்டித்து எடுத்துச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் அரிமா நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). இவா், தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (40), ராஜகோபால் (50), அருண்குமாா் (25), செம்போடை சுப்பிரமணியன் (55) ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க புதன்கிழமை சென்றாா்.

இவா்கள் 5 பேரும் புதன்கிழமை இரவு வேதாரண்யத்திலிருந்து 16 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்துவிட்டு, விசைப்படகில் காத்திருந்தனா். வியாழக்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, 350 கிலோ எடையிலான மீன்பிடி வலையை காணவில்லையாம். கண்ணாடியிழை படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள், வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்நிலைய போலீஸாா், மீன்வளத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.