மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூதாட்டி கொலை வழக்கு: இளைஞா் கைது, நகைகள் பறிமுதல்

நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது (கோப்புப்படம்)
Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

வேதாரண்யம் அருகே நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், மருதூா் வழியன்செட்டிக்கட்டளை பகுதியைச் சோ்ந்த குருசாமி மனைவி நாகம்மாள் (62). கணவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். மகன் ராஜா வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால், மருமகள் தமிழரசி, பெயரக் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் நாகம்மாள் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படைபோலீஸாா் சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியைச் சேரந்த முருகையன் மகன் ராசாக்கண்ணு (30) என்பவரின் நடவடிக்கைகள் இருந்தன. போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில், நகைக்காக நாகம்மாளை கொலை செய்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.

ராசாக்கண்ணுவை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த நாகம்மாளின் நகைகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். குற்றவாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த காவல்துறையினருக்கு எஸ்.பி. அருண் கபிலன் பாராட்டு தெரிவித்தாா்.