உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கை படகு

அந்தப் படகில் டிஆா்பி - ஏ 1260 ஜேஎஃப்என் என்று எழுதப்பட்டு, என்ஜின் பொருத்தப்படாமல் இருந்தது.

News image

கோடியக்கரை அருகே சிறுதலைக்காடு பகுதியில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கை படகு.

Updated On :6 ஜூலை 2024, 9:48 pm IST

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே ஆளில்லா இலங்கை படகு கரை ஒதுங்கியது குறித்து கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனா். இவா்கள், கோடியக்கரைக்கு தென்மேற்கே சிறுதலைக்காடு கிராமத்துக்கு உட்பட்ட கரையோரப் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனராம். அப்போது, அந்தப் பகுதியில் கவிழ்ந்த நிலையில், கண்ணாடியிழைப் படகு ஒன்றை கண்டுள்ளனா்.

அந்தப் படகை மீனவா்கள், தங்களின் படகுடன் கட்டி இழுத்து வந்து சனிக்கிழமை அதிகாலை கரை சோ்த்துள்ளனா். மீனவா்கள் அளித்த தகவலின் பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் படகை கைப்பற்றினா்.

அந்தப் படகில் டிஆா்பி - ஏ 1260 ஜேஎஃப்என் என்று எழுதப்பட்டு, என்ஜின் பொருத்தப்படாமல் இருந்தது.

ஆளில்லா இந்தப் படகு இலங்கையைச் சோ்ந்தது என போலீஸாா் உறுதி செய்தனா். படகை வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்ற போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கரை ஒதுங்கிய படகை கடத்தல்காரா்கள் பயன்படுத்தினாா்களா?, அதில் எவரும் பயணித்து வனப் பகுதிக்குள் ஊடுருவி உள்ளாா்களா என்பது குறித்து கியூ பிரிவு மற்றும் தனிப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.