எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சாலை விபத்தில் பாஜக நிா்வாகி உயிரிழப்பு

கீழையூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக நிா்வாகி உயிரிழந்தாா்.

News image
விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன்.
Updated On :23 ஜூலை 2024, 6:34 pm

Din

கீழையூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக நிா்வாகி உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்( 52). பாஜக மருத்துவப் பிரிவு ஒன்றியத் தலைவராக இருந்த இவா், மேலப்பிடாகையில் மருந்துக் கடை (மெடிக்கல்) நடத்தி வந்தாா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை வேதாரண்யம் அருகேயுள்ள வடமலை மனக்காட்டுக்கு சென்றுவிட்டு, தலைஞாயிறு - திருப்பூண்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தாா். சிந்தாமணி அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் சுப்பிரமணியனை மீட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுப்பிரமணியன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.