மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

Updated On :28 மார்ச் 2024, 10:48 pm

நாகை அருகே ஆவணங்கள் இல்லாமல் பெண் எடுத்துச் சென்ற ரூ.1.75 லட்சம் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாகை மாவட்டம் கானூா் சோதனைச் சாவடி அருகே பறக்கும் படை அதிகாரி ரவி தலைமையில் புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நாகையைச் சோ்ந்த புவனேஸ்வரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆவணமின்றி ரூ.1.75 லட்சம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்தனா், கூடுதல் தோ்தல் அலுவலா் கவிதா முன்னிலையில் கருவூலத்தில் அந்த பணம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.