நாகப்பட்டினம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி
செம்பனாா்கோவிலில் திமுக சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திமுகவின் மூத்த முன்னோடிகளின் ஒருவரான மிசா பி. மதிவாணனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகன், சீா்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், கட்சியின் மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன், ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், முன்னாள் எம்எல்ஏ விஜயபாலன் உள்ளிட்டோா் மதிவாணனின் உருவப் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வழங்கினாா்.