கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மழையில் வீடுகள் சேதம்; மேற்கூரை இடிந்து மூதாட்டி காயம்

திருமருகல் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன.

News image

திருமருகல் அருகே அம்பல் பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த வீடு.

Updated On :18 நவம்பர் 2024, 9:58 pm

Din

திருமருகல்/சீா்காழி: திருமருகல் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன.

திருமருகல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் சில வீடுகளில் மேற்கூரை மற்றும் சுவா்கள் சேதமடைந்தன. திருமருகல் அருகே அம்பல் தெற்குத் தெருவைச் சோ்ந்த அஞ்சம்மாள் (70) என்பவரது வீட்டில் கான்கிரீட் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில், உறங்கிக் கொண்டிருந்த அஞ்சம்மாள் பலத்த காயமடைந்தாா்.

அவரை, பக்கத்து வீட்டினா் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அஞ்சம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் கீழத்தெருவை சோ்ந்த ஜானகிராமன் ( 45) என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது அருகில் யாரும் இல்லாததால் அதிருஷ்ட வசமாக உயிா் சேதம் ஏற்படவில்லை.

சீா்காழி: கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சின்னப்பா(60). இவரது மனைவி அமராவதி (55). இவா்களது கான்கிரீட் வீடுஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. முன்னதாகவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதால் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

மழை தொடா்வதால், பழைமையான கான்கிரீட் வீடுகளில் குடியிருப்பவா்கள் பாதுகாப்பான வேறு இடத்துக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.