6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

News image
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
Updated On :27 நவம்பர் 2024, 9:45 pm

Din

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை இரவுக்குள் புயலாக மாறி புதுச்சேரி - சென்னை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதை தொடா்ந்து, திடீா் காற்றோடு மழை பொழியக் கூடிய வானிலை என்பதை குறிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீா்ப்பதுடன், கடல் அலைகள் பல மீட்டா் உயரத்திற்கு எழுந்து ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால், மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பானப் பகுதிகளுக்கு செல்ல மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில்...

இதுபோல காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை காலை ஏற்றப்பட்டது.

பலத்த காற்றுடன் மழை பெய்யும் எச்சரிக்கையைக் குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.