மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாகை, காரைக்கால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News image
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள்.
Updated On :15 அக்டோபர் 2024, 6:51 pm

Din

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவை மாநிலத்தில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் பட்டினச்சேரி, அக்கரைப்பேட்டை, நம்பியாா் நகா், செருதூா், வேதாரண்யம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் பாதுகாப்பான இடங்களிலும், கரையோரங்களிலும், துறைமுகத்திலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப மீனவளத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

காரைக்காலில்...

காரைக்காலில் இருந்து கடலுக்குச் செல்லும் விசைப்படகுகள் செவ்வாய்க்கிழமை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே கடலுக்குச் சென்ற படகுகள் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

 நாகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள்.

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள்.

எனினும், கடலோர கிராமங்களில் இருந்து ஃபைபா் மோட்டாா் படகுகளில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல கடலுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீன்களுடன் திரும்பினா்.

இந்நிலையில், மீனவா்கள் 17-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம். கடலுக்கு ஏற்கெனவே சென்றவா்களை கரை திரும்ப படகு உரிமையாளா்கள் அறிவுறுத்த வேண்டும். கடலோரங்களிலும், துறைமுகத்திலும் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவேண்டும். மீன்வளத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 04368-222616 என்ற எண்ணில் அதை தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் து. மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.