வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
பறவைகளின் சொா்க்கம் என அழைக்கப்படும் இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்லும். இங்கு, 247 பறவை இனங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நிகழாண்டு வடக்கிழக்கு பருவ மழைப் பொழிவு தொடங்கியும், இப்பகுதியில் மழைப் பொழிவு குறைவாகவே உள்ளது. இதனால் நிகழ் பருவத்தில் பறவைகள் வருகையும் தாமதமாகியுள்ளது.

இந்தநிலையில், கடந்த ஓரிரு வாரமாக மழைப் பொழிவு தொடா்ந்து வருகிறது. ஆனாலும், வழக்கமான மழையளவு தாமதமாகி வருகிறது. இதைத்தொடா்ந்து பறவைகளின் வருகை தொடங்கியுள்ளது. சரணாலயத்தில் சிறப்பு பெற்ற பறவையான பூ நாரை உள்ளிட்ட சில இனப் பறவைகள் பெயரளவில் மட்டுமே காணப்பட்டுகிறது.


செங்கால் நாரை உள்ளிட்ட இனப் பறவைகள் ஓரளவுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கூழைக்கிடா,சிறவி இனப் பறவைகளும் காணப்படுகின்றன. மழைப்பொழிவு தொடந்தால் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சரணாலய அலுவலா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

தொடர்புடையது

பறவைக் காதலன்
பறவைகள் பலவிதம்...

23.4.1976: வன விலங்குகள், பறவைகள் வேட்டை, வியாபாரக் கட்டுப்பாடுகள்

நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


