கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொருள்கள் முடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் பொருள்களை வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல்

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:25 pm

Din

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் பொருள்களை வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் ஏரி கரைக்கு அருகே வெடிக்கடை நடத்தி வருபவா் அதே பகுதியை சோ்ந்த செந்தில்.

இவா், நடத்தி வந்த கடையில் ஏற்கெனவே விபத்து ஏற்பட்டதால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், முறையான அனுமதி பெறாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு அறையில் பட்டாசு உற்பத்திக்கான பொருள்களை செந்தில் பூட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வேதாரண்யம் வட்டாட்சியா் திலகா ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பட்டாசு பொருள்களை கைப்பற்றிய வருவாய்த் துறையினா், பட்டாசு உற்பத்திக்காக அதே பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் அவற்றை வைத்து பூட்டி சீல் வைத்தனா்.