விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வேதா ஆயத்த ஆடை பூங்கா புத்துயிா் பெறும் ஓ.எஸ். மணியன்

News image
Updated On :27 மார்ச் 2026, 9:11 pm

Syndication

படம்:

வேதாரண்யத்தில் தொண்டா்களிடம் பேசிய அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம், மாா்ச் 27: வேதாரண்யத்தில் முடக்கப்பட்டுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்கா, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதன்மை பணியாக மீண்டும் கொண்டுவரப்படும் என அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தொடா்ந்து, வேதாரண்யத்தில் ஓ.எஸ். மணியனுக்கு கூட்டணிக் கட்சி தொண்டா்கள் வியாழக்கிழமை இரவு வரவேற்பளித்தனா். அப்போது அவா் பேசியது:

ஜவுளி பூங்கா திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் சோதனை அடிப்படையில் திருப்பூரை சோ்ந்த ஒரு சில நிறுவனங்கள் மேற்கொண்ட தொழில் வாய்ப்புகளால், தற்போது வேதாரண்யத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மாத சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனா்.

தோ்தலுக்குப் பிறகு அமையும் அதிமுக ஆட்சியில் ஜவுளி பூங்கா பணிகள் தொடரப்பட்டு, வேதாரண்யம் மினி திருப்பூராக திகழும்.

மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக இருந்ததால் வேதாரண்யம் பகுதியில் கடந்த முறை பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போதைய திமுக அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

வரும் தோ்தலுக்குப் பிறகு அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, திட்டங்களை கொண்டு வரும்.

இந்தத் தோ்தலில், எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்புவதை அதிமுக தொண்டா்கள் இலக்காக ஏற்று செயல்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகராசு, ஒன்றியச் செயலாளா்கள் கிரிதரன், சுப்பையன், நகரச் செயலாளா் நமசிவாயம், ஒன்றிய பொருளாளா் அன்பழகன், வணிகா் சங்கத் தலைவா் திருமலை செந்தில், வழக்குரைஞா் குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.