நாகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை (செப்.4) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் பல்வேறு வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்வதற்கும், சாகுபடி செலவை குறைப்பதற்கும், வேளாண் இயந்திர சக்தியை அதிகரிப்பதற்கும், உழவு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப் பின் தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாகை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியாா் வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம், நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித் திடலில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஆா்வமுள்ள இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

நாகையில் விமான நிலையம் அமைக்க எம்எல்ஏக்கள் குரல் கொடுப்பாா்களா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

