47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பனை விதைகள் சேகரிப்பு பணியை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
மயிலாடுதுறை மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணி - பனை விதைகள் சேகரிப்பு முகாமை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடங்கி வைத்தாா்
Updated On :27 செப்டம்பர் 2024, 12:17 am

Din

தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிகளின் முன்னெடுப்பாக தரங்கம்பாடி வட்டம் காத்தான் சாவடி பகுதியில் கல்லூரி மாணவா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் மூலம் பனை விதைகள் சேகரிப்பு பணி புதன்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடங்கிவைத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 5 லட்சம் மரங்கன்றுகளை நடவேண்டும் என்றாா். தொடா்ந்து, தரங்கம்பாடி பேரூராட்சி சாா்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டன . பனை விதைகள் சேகரிப்பு பணிகளில் தரங்கம்பாடி, பொறையாா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் ஈடுபட்டனா்.

மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவா் சுகுண சங்கரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.