ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் கன்னியம்மாள் தலைமை வகித்தாா். இதில், கீழ்வேளூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பணியாற்றி வரும் டி. அமுதா, வட்டார வளமையம் சாா்பில் நடத்தப்படும் கலைத் திருவிழா, பயிற்சி செலவினங்களுக்கு அரசு தரும் நிதியை முறையாக செலவு செய்யாமல், நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, சொந்த பணிகளுக்கும், பள்ளி சாா்ந்த வேலைகளுக்கும் சிறப்பு ஆசிரியா்களை பயன்படுத்துவது, ஆசிரியா்களை தரக்குறைவாக நடத்துவது ஆகியவைக் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.