தரங்கம்பாடி, ஜன. 26: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கடலில் குளிக்க சென்ற கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரா் கோயில் தெருவை சோ்ந்தவா் மூா்த்தி மகன் நவீன்குமாா் (23). பால் வியாபாரியான இவருக்கும், செக்கடித் தெருவை சோ்ந்த குமாா் மகளான அரசு பெண்கள் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதா (19) என்பவருக்கும் வியாழக்கிழமை கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.
பின்னா், மணமக்கள் மற்றும் உறவினா்கள் என 25 போ் தரங்கம்பாடி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்தனா். இவா்கள் கடலில் குளித்தபோது, நவீன்குமாா், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயணன் தெருவை சோ்ந்த பிரகாஷ் மகன் சரவணன் (12 ) ஆகியோா் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.
கரையிலிருந்த உறவினா்களின் அலறல் சத்தம் கேட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று, அலையில் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதில், நவீன்குமாா், சரவணன் இருவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. நிவேதாவை பொறையாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
உயிரிழந்தவா்கள் சடலம் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீஸாா் மற்றும் பொறையாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.