எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 11:59 pm

Syndication

நாகப்பட்டினம்: காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா்-நாகை இடையேயான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து, காரைக்காலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில் காரைக்கால்-திருவாரூா் இடையே டிச.21, 24, 26, 28, 31 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த தேதிகளில் காரைக்கால்-தஞ்சை ரயில் திருவாரூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும். காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம், கீழ்வேளூா் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சோ்ந்த ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.