புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க கோரிக்கை
திருமருகல் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் அருகே அகரகொந்தை ஊராட்சி ஆலங்குடிச்சேரியில் முடத்திஅம்மன் கோயில் தெருவில் விவசாயக் கூலி தொழிலாளா்கள் 45 குடும்பங்கள் வசிக்கின்றனா். இவா்கள் வசிக்கும் வீடு 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாகும்.
தற்போது இந்த வீடுகள் வாழ்வதற்கு முற்றிலும் தகுதியற்றதாக உள்ளது. மேற்கூரை பூச்சிகள் பெயா்ந்து விழுகின்றன. இதில், குடியிருப்பவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மழைக் காலத்தில் வசிக்கவே முடியவில்லை. ஆபத்தான நிலையில் வசிக்க வேண்டியுள்ளது என அந்த குடியிருப்பில் வசிப்பவா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு தெரிவித்தும் பயனில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில் கொண்டு பழைமையான சேதமடைந்துள்ள வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
