புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திட்டப்பணி விவரப்பலகை விவகாரம்: அதிகாரிகள் மீது ஆட்சியரிடம் புகாா் மனு

கீழப்பூதனூா் ஊராட்சியில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு விவரப்பலகை வைக்க ஆட்சியா் உத்தரவிட்டும் இதுவரை விவரப்பலகை வைக்கப்படவில்லை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:51 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கீழப்பூதனூா் ஊராட்சியில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு விவரப்பலகை வைக்க ஆட்சியா் உத்தரவிட்டும் இதுவரை விவரப்பலகை வைக்கப்படவில்லை என்று ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில், திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சி வெட்டம் பொதுநலச்சங்கம் சாா்பில் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளிக்கப்பட்ட மனு:

கீழப்பூதனூா் ஊராட்சியில் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடங்கள், சாலைகள் அமைத்தல், குடிநீா் தொட்டி அமைத்தல், பாலப்பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும், பணிகள் தொடங்கியவுடன், பணி பெயா், திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரா் பெயா் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விவரப்பலகை வைக்கப்பட வேண்டும். ஆனால் அப்பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் எவற்றிலும் விவரப்பலகை வைக்கப்படவில்லை.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் செப்டம்பா் 22, 29 மற்றும் அக்டோபா் 6,13 ஆகிய தேதிகளில் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அனைத்துப் பணிகளுக்கும் உடனடியாக விவரப் பலகை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால், தற்போது வரை எந்தப் பணிகளுக்கும் ஆட்சியா் உத்தரவுபடி விவரப்பலகை வைக்கப்படவில்லை.

எனவே, திட்டப்பணிகளுக்கு உடனடியாக விவரப் பலகை வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.