விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்தை மறித்து கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:31 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்தை மறித்து கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் காரைநகா் கிராமத்தில் 500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் உள்ளவா்கள் பல ஆண்டுகளாக புதுப்பாலம் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனா். அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வது வழக்கம். சில மாதங்களாக இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் தொலைதூரம் நடந்துசென்று பேருந்து ஏறவேண்டிய அவலநிலை உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் பயனில்லை. இதையடுத்து, அவ்வழியாக சென்ற தனியாா் பேருந்தை பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அரசு, தனியாா் பேருந்துகளை புதுப்பாலம் நிறுத்தத்தில் நின்று செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.