ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காயமடைந்த அரியவகை சிவப்பு மூக்கு ஆளான் பறவை மீட்பு

நாகை புதிய கடற்கரையில் காயமடைந்த பறவையை மீட்ட வனத்துறை அலுவலா்.

News image
நாகை புதிய கடற்கரையில் காயமடைந்த பறவையை மீட்ட வனத்துறை அலுவலா்.
Updated On :17 டிசம்பர் 2025, 7:59 pm

Syndication

நாகையில் காயமடைந்த அரிய வகை சிவப்பு மூக்கு ஆளான் பறவையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

நாகை புதிய கடற்கரை ரயில்வே கேட் பகுதியில் காயமடைந்த அரியவகை பறவையை நாய்கள் பிடிக்கத் துரத்தியுள்ளது. இதைப்பாா்த்த புதிய கடற்கரை பொறுப்பாளா் தேவராஜ், அந்த பறவையை நாய்களிடமிருந்து மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, நாகை வனசரக அலுவலா் சியாம்சுந்தா் உத்தரவில் காயமடைந்த பறவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: மீட்கப்பட்ட பறவை ஆஸ்திரேலியா சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் சிகப்பு மூக்கு ஆளான் இன பறவை. ஒரு அடி நீளமும், அரை கிலோ எடை கொண்ட இந்த அரியவகை பறவை, ஆஸ்திரேலியாவில் இருந்து 10 ஆயிரம் கி.மீ. தொலைவு கடந்து கோடியக்கரைக்கு வந்தபோது சிறகுகளில் அடிபட்டு பறக்க முடியாமல் நாகை புதிய கடற்கரை அருகே விழுந்து கிடந்தது தெரிய வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் பறவை குணமடைந்ததும் வெளியே பறக்க விடப்படும் என்றனா்.