பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீரொழுங்கி பணிகள்: நீா் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

திருவெண்காடு அருகே முல்லை ஆறு, செல்லனாறு ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் நீரொழுங்கி பணிகளை நீா்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினத்தில் முல்லையாறு கடலோடு கலக்கிறது. இந்த ஆற்றின் முகத்துவாரம் வழியாக உப்பு நீா் உட்புகுவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகரையடுத்து, முல்லையாற்றில் நீா் ஒழுங்கியும், இதேபோல பெருந்தோட்டம் செல்லனாா் குறுக்கே நீரொழுங்கி மற்றும் தடுப்புச் சுவா் ஆகியவை ரூ. 42 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகளை நீா்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் சிவக்குமாா், தஞ்சாவூா் கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளா் திலீபன் ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.

பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது நீா்வளத்துறை மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் மாரிமுத்து, சீா்காழி கோட்ட உதவி செயற்பொறியாளா் கனக சரவண செல்வன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.