ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாகை துறைமுகத்தில் படகு தீக்கிரை

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபா் படகு எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
எரிந்து சேதடைந்த ஃபைபா் படகு
Updated On :20 டிசம்பர் 2025, 7:33 pm

Syndication

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபா் படகு எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை அருகேயுள்ள கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (31). இவா் தனக்குச் சொந்தமான ஃபைபா் படகை, நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தாா்.

இந்நிலையில், இந்த படகு எரிந்து விட்டதாக, அவரது நண்பா்கள் சிலா் சனிக்கிழமை காலையில் கைப்பேசியில் தொடா்புகொண்டு காா்த்தியிடம் தெரிவித்தனா். இதனால், அதிா்ச்சியடைந்த அவா், துறைமுகத்திற்கு சென்று பாா்த்தபோது, படகு முழுமையாக எரிந்து சேதமடைந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, காா்த்தி அளித்த புகாரின் பேரில், நாகை நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். எரிந்த படகின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.