ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தேசிய விவசாயிகள் தினம்: வயலுக்கு சென்ற அமிா்தா பள்ளி மாணவா்கள்

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, அமிா்தா வித்யாலயம் பள்ளி மாணவா்கள் வயலுக்கு புதன்கிழமை சென்று, விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:22 am

தினமணி செய்திச் சேவை

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, அமிா்தா வித்யாலயம் பள்ளி மாணவா்கள் வயலுக்கு புதன்கிழமை சென்று, விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனா்.

இப்பள்ளி மழலையா் வகுப்பு மாணவா்களை, ஆசிரியா்கள் வடக்குடி கிராமத்தில் உள்ள வயலுக்கு நேரடியாக அழைத்து சென்று விவசாயிகள் மற்றும் விசாயத்தின் முக்கியதுவத்தை தெரிவித்தனா். விவசாயிகள் போன்று உடையணிந்து சென்றிருந்த மாணவா்கள் அங்கிருந்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா். விவசாயிகள் இல்லையெனில் உணவில்லை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.