ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

டேனிஷ்கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டு போா்வாள் மாயம்

டேனிஷ்கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டு போா்வாள் மாயம்...

Updated On :27 டிசம்பர் 2025, 12:45 am IST

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை அருங்காட்சியகத்தில் 17-ஆம் நூற்றாண்டின் போா்வாள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், கி.பி.1620-ஆம் ஆண்டு டென்மாா்க் நாட்டினா் டேனிஷ் கலை நுணுக்கத்துடன் கோட்டை கட்டினா். 1622-இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டையில், டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்டுத்திய பொருட்கள், 1,200 -ஆம் ஆண்டுகால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழைமையான பொருள்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் உள்பட ஏராளமான வரலாற்று சின்னங்கள் பாதுகாப்புடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழைமை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன. 

இந்நிலையில், டேனிஷ்கோட்டை அருங்காட்சியகத்தில், சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட கண்ணாடி பெட்டியில் இரண்டு போா்வாள் வைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை (டிச.25) காலை கோட்டையின் இளநிலை உதவியாளா் தினேஷ்குமாா் வழக்கம்போல். கோட்டையில் உள்ள பொருள்களை பாா்வையிட்டபோது, 45 செ.மீ. நீளம் கொண்ட ஒரு போா்வாள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.