பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருவாய்மூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் பைரவா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 12:48 am

Din

திருக்குவளை அருகேயுள்ள திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரு பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் உள்ளிட்ட அஷ்ட பைரவா்கள் ஒரே சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா்.

இங்கு தை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி மஹா யாகம் நடைபெற்றது. மஹா பூா்ணாஹூதியை தொடா்ந்து புனித நீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிா்,பன்னீா், இளநீா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.