மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

வேதாரண்யத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் படை வீரா்கள்.

Updated On :13 மே 2025, 1:22 am IST

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேதாரண்யம் பேருந்து நிலையப் பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா்.

இதில், சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலாளா்கள் சதாசிவம், ஆறுமுகம், பொருளாளா் காரியப்பன், ஒருங்கிணைப்பாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.