தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

வேதாரண்யத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் படை வீரா்கள்.

Updated On :12 மே 2025, 7:52 pm

Din

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேதாரண்யம் பேருந்து நிலையப் பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா்.

இதில், சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலாளா்கள் சதாசிவம், ஆறுமுகம், பொருளாளா் காரியப்பன், ஒருங்கிணைப்பாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.