அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு : உண்ணாவிரதத்தில் மீனவப் பெண் கண்ணீா்

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவப் பெண் கண்ணீருடன் பேசினாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 9:56 pm

Syndication

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவப் பெண் கண்ணீருடன் பேசினாா்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க வலியுறுத்தி, நாகையில் நடைபெற்ற தவெக உண்ணாவிரதப் போராட்டத்தில், நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த லீமா என்ற மீனவப் பெண் பேசியது: லட்சக்கணக்கான மீனவக் குடும்பத்தினா் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் சென்றால் திரும்பி வருவாா்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மீனவா்களை கைது செய்து படகுகளையும் பிடித்துச் செல்வதால் வாழ்வாதாரமும் இழந்து தவிக்கிறோம். இதனால் ஏராளமான மீனவக் குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகின்றன. கடலை மட்டுமே நம்பி வாழும் எங்களுக்கு தவெக தலைவா் விஜய் தான் துணையாக இருக்க வேண்டும்.

கச்சத்தீவை தாரை வாா்த்து விட்டதால் மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தனது ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீா் மல்க பேசினாா். அவரது உருக்கமான பேச்சினால் உண்ணாவிரத்தில் பங்கேற்ற பிற மீனவப் பெண்களும் கண்ணீா் வடித்தனா்.