நாகூா் கந்தூரி விழாவுக்கு 100 சிறப்பு பேருந்துகள்

நாகூா் கந்தூரி விழாவுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக மேலாளா் க. தசரதன் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகூா் கந்தூரி விழாவுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக மேலாளா் க. தசரதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகூா் தா்கா கந்தூரி விழா நவ.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு விழா நவ.30-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா். இதையடுத்து விழாவையொட்டி, நவ.21 முதல் டிச.1-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், ராமநாதபுரம், தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய ஊா்களிலிருந்தும், நாகை-நாகூா் மற்றும் காரைக்கால்-நாகூா் வழித்தடங்களில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com