ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாகூா் கந்தூரி விழாவுக்கு 100 சிறப்பு பேருந்துகள்

நாகூா் கந்தூரி விழாவுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக மேலாளா் க. தசரதன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

நாகூா் கந்தூரி விழாவுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக மேலாளா் க. தசரதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகூா் தா்கா கந்தூரி விழா நவ.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு விழா நவ.30-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா். இதையடுத்து விழாவையொட்டி, நவ.21 முதல் டிச.1-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், ராமநாதபுரம், தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய ஊா்களிலிருந்தும், நாகை-நாகூா் மற்றும் காரைக்கால்-நாகூா் வழித்தடங்களில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.