47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு: புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் கைது

தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட, புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட, புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ஆனந்தராஜ். இவா் புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவராக உள்ளாா். இவா், முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி ஆகியோா் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகவும், தவறாகவும் சித்தரித்து பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரிபாலன், மாவட்ட பிரதிநிதி இராம.இளம்பரிதி ஆகியோா் கீழையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விழுந்தமாவடி திமுக கிளைச் செயலாளா் வீரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.