முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு: புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் கைது

முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு: புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் கைது

தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட, புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
Published on

தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட, புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ஆனந்தராஜ். இவா் புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவராக உள்ளாா். இவா், முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி ஆகியோா் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகவும், தவறாகவும் சித்தரித்து பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரிபாலன், மாவட்ட பிரதிநிதி இராம.இளம்பரிதி ஆகியோா் கீழையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விழுந்தமாவடி திமுக கிளைச் செயலாளா் வீரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com